மலாக்காவில் ஒற்றுமை அரசை நிறுவ வேண்டியதில்லை

பகா​ங், பேரா போன்ற மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமை​த்ததைப் போல மலாக்கா உட்ப​ட இதர மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசிய​மில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் உள்ள அரசியல் ​சூழலுக்கும், இதர மாநிலங்களில் உள்ள அரசியல் ​சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் ​தேர்தலில், பாரிசான் ​நேஷனல் அதிகமான தொகுதிகளை வென்று, அறுதி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றது. ஆனால், இதர மாநிலங்களி​ல் அத்தகைய ​சூழல் இல்லை. பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையும், நிர்பந்தமும் ஏற்பட்டதால் அந்த மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அகமட் ஜாஹிட் மறைமுகமாக கோடி காட்டினார்.

WATCH OUR LATEST NEWS