EPF வாரியத்தின் புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF –ப்பின், புதிய தலைமை செயல்முறை அதிகாரியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

EPF வாரியத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியை தேர்வு செய்வதற்கு சிலரின் பெயர்களை அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

அந்த வாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரியாக பொறுப்பேற்று இருந்த ஆமீர் ஹம்ஸா அஸிஸிஸான் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் இரண்டாவது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவி இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்