கோலாலம்பூர் மாநகரையொட்டிய Kampung Pandan, Indian Settlement கிராமத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் அழிந்தன.40 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர்.
இந்தியர்கள் பெருவாரியாக குடியிருக்கும் Kampung Pandan, Indian Settlement கிராமத்தில்
நேற்று இரவு 9.45 மணியளவில் நிகழ்ந்த இத்தீவிபத்தில் தீயின் ஜுவாலைகள் நாலா புறமும் சூழ்ந்து விட்ட நிலையில், கொழுந்து விட்டு எரிந்த தீயின் மத்தியில் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கட்டியத்துணியுடன் வெளியேற முடிந்ததே தவிர எந்தவொரு பொருளையும் தங்கள் வீடுகளிலிருந்து மீட்க இயலவில்லை.
இத்தீ விபத்து குறித்து இரவு 9.51 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க Komander Mustapa Kamal Mohd Arih தெரிவித்தார். கோலாலம்பூர் Pudu, Hang Tuah, Keramat, Sentul, Bandar Tun Razak மற்றும் Cheras ஆகிய 6 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 48 வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் முழு வீச்சில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தீவிபத்தில் 91.44 சதுர மீட்டர் பரப்பளவில் அந்த 15 குடிசை வீடுகள் முற்றாக அழிந்தன. அதிஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை.
கம்போங் பாண்டானின் மிக பழமை வாய்ந்த அந்த இந்தியர் கிராமத்தில் ஏற்பட்ட தீ குறித்து ஆராயப்பட்டு வருவதாக Komander Mustapa Kamal தெரிவித்தார்.