கிரியான் மாவட்டத்தில் உள்ள பாகான் செராய் சந்தையின் தண்ணீஇர் தொட்டியில் இருந்து கீழே குதிக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தீயணைப்பு - மீட்புப் படையினர் காப்பாற்றினர்.
39 வயது கொண்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 6 மாடி உயரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியின் மேல் நின்று கொண்டிருந்தார், அவர் காப்பாற்றப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என பேரா மாநில தீயணைப்பு- மீட்புப் படையின் துணை இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.








