12 வயது சிறுமியைக் கற்பழித்தக் குற்றத்திற்காக நால்வருக்குத் தலா 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கோல திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் 20 வயது முஹமாட் ஃபரிசால் ஃபௌசி, 24 வயது துவான் முஹமாட் ஷஃபிக் துவான் இஸ்மாயில், 23 வயது முஹமாட் கார்டாஃபி அப்துல்லா,26 வயது அஹ்மாட் ஷா ஹெர்ஃபுடின் ஓமார் ஆகியோர் ஈடுபட்டதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் இரவு 9.00 மணியில் இருந்து பின்னிரவு 1.00 மணி வரையில் டுங்கூனில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் அச்சிறுமி கற்பழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அஹ்மாட் ஷா ஹெர்ஃபுடின் கைது செய்யப்பட்ட நாளான 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியில் இருந்து தண்டனை காலம் தொடங்கிய நிலையில், மற்றவர்களுக்கு தீர்ப்பு கொடுக்கப்பட்ட இன்றிலிருந்து தண்டனை காலம் தொடங்குகிறது.








