இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி, பேரா, கிளாந்தாம் சிலாங்கூர், திரங்கானு ஆகிய 4 மாநிலங்களில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 1, 799 குடும்பத்தைச் சேர்ந்த 5,990 பேர் தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களில் அதிகமானோர், அதாவது 1,534 குடும்பங்களைச் சேர்ந்த 4,865 பேர் கிளாந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் இணையப்பக்கம் தெரிவித்துள்ளது.
திரங்கானுவில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 999 பேரும்,
பேராவில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேரும்,
சிலாங்கூரில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும் தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பகாங், ஜோகூர், சபா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் மலேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தகவல் வெளியிட்டுள்ளது.








