May 21, 2026
Thisaigal NewsYouTube
50 விழுக்காடு அபராத கழிவு சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) வழங்கவில்லை - மடானி அரசாங்கத்தின் செயலகம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

50 விழுக்காடு அபராத கழிவு சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) வழங்கவில்லை - மடானி அரசாங்கத்தின் செயலகம் அறிவிப்பு

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) சாலை குற்றங்களுக்காக எந்தவொரு சிறப்பு கழிவும் வழங்கவில்லை என்பதை மடானி அரசாங்கத்தின் செயலகம் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

சாலை குற்றங்களுக்கான காவல் துறையின் அபராதங்களுக்கு மட்டுமே மலேசிய போலீஸ் படை 50 விழுக்காடு சிறப்புக் கழிவு வழங்கப்படும் எனத் திட்டமிட்டிருந்த போது சில ஊடகங்கள் அந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொண்டு வெளியிட்டிருந்த செய்தியினை தொடந்து இத்தகவல் வெளியிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல், தொழிற்கல்வி ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல், தனியார் அல்லது வணிக மோட்டார் வாகன உரிமம் புதுபித்தல், குறிப்பிட்ட சமான்களை செலுத்துதல் போன்றவைக்கு மட்டுமே ஜே.பி.ஜே சேவை வழங்கவுள்ளது.

அபராதம் செலுத்த விரும்பும் பொதுமக்கள் முன்பாகவே பி.டி.ஆர்.எம் இன் MyPay Portal -லில் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றது. இதுக்குறித்து போலி செய்தி எதுவும் பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை