May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பதின்ம வயது இளைஞர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மூன்று பதின்ம வயது இளைஞர்கள் கைது

Share:

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ஜோகூர்பாருவில் 7 வயது சிறுவனை கடத்தும் முயற்சியில் உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் மூன்று பதின்ம வயது இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

15,17,18 வயதுடைய அந்த மூன்று பதின்ம வயது இளைஞர்களும் நேற்று மாலை 5.40 மணியளவில் பொந்தியானில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர்பாரு, செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

அந்த மூன்று இளைஞர்களும் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் வசிப்பிட அந்தஸ்தைக் கொண்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் , தனது 7 வயது மகனுடன் சென்று கொண்டிருந்த போது, அவர்களை மடக்கிய கும்பல் ஒன்று அந்த சிறுவனை கடத்த மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டது.

தனது மகனை காப்பாற்ற சிறுவனின் தந்தை அந்த கும்பலுடன் கடுமையாக போராடியதால் அவர் படுகாயத்திற்கு ஆளானதாக கடந்த புதன்கிழமை ஏசிபி ரவூப் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி