இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நார்வே நாட்டுப் பயணத்தின் போது, கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடம் ஊடக சுதந்திரம் குறித்துக் கேள்வி எழுப்பிய நார்வே நாட்டின் 'டாக்ஸாவிசென்' செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஹெல் லிங் உலகளவில் கவனம்பெற்றுள்ளார்.
பிரதமரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்ப முயன்ற அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இதற்குத் தகுந்த விளக்கமளித்துள்ளது. இந்தியாவின் 5,000 ஆண்டுகால நாகரிகப் பின்னணி, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இந்தியத் தரப்பு இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அரங்கிலும், இந்திய அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.








