TVET எனப்படும் கல்வி மற்றும் தொழில்பயிற்சிக்கான மாணவர் சேர்ப்பில் எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.
இந்த பயிற்சிக்கு சேர்க்கப்படும் மனுதாரர்களுக்கு குறைந்த பட்ச கல்விக்தகுதியே கோரப்படுவதால் அவர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்வதற்கான சாத்தியமும் இல்லை என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.