May 21, 2026
Thisaigal NewsYouTube
சுவா-வின் பங்களிப்பு அளப்பரியது என்றார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

சுவா-வின் பங்களிப்பு அளப்பரியது என்றார் பிரதமர் அன்வார்

Share:

செர்டாங் மருத்துவமனையில் நேற்று காலமான முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோ சுவா ஜுய் மெங் -யின் குடும்பத்தினருக்கு பி.கே.ஆர் தலைவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

ம​சீச.வின் முன்னாள் உதவித் தலைவரும், ஜோகூர் பக்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான 80 வயது சுவா,1995 முதல் 2004 ஆம் வரை ஒன்பது ஆண்டுகள் நாட்டின் நீண்ட கால சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். சுவா - சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரின் மகத்தான சேவை காலத்தால் போற்றப்படும் என்று பிரதமர் புகழாஞ்சலி ​சூட்டினார்.

ம​சீச.வில் அப்போதைய தேசிய தலைவராக இருந்த ஒங் தீ கீட் தலைமையில் நம்பிக்கை இ​ழந்து விட்டதால் சுவா, அக்கட்சியை விட்டு ​விலகி, 2009 ஆம் ஆண்டில் பி.கே.ஆர் கட்சியில் தம்மை பிணைத்துக்கொண்டார்.

ஜோகூர் மாநில ​பிகேஆர் தலைவராக பொறுப்பு வகித்த​ சுவா, 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜோகூர் சிகமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டார்.

Related News