லஞ்சம் ஊழல் தொடர்பில், முன்னாள் நீதிபதியும், ஒரு போலீஸ்காரரும் இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.|
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், ஈப்போ, தாமான் தாசேக் முதியாரா, ஜாலான் கோலக் கங்சாரில் உள்ள ஓர் உணவகத்தில், சிரியா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான 43 வயதுடைய புர்ஹனுடின் இஸ்மி அடாமும், லான்ஸ் கார்போரல் அந்தஸ்தைக் கொண்ட 34 வயதுடைய முகமட் ஹம்ரி அயோப்பும், கல்வாட் வழக்கு தொடர்பில் 4 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


