அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு நல்ல செய்தி காத்திருப்பதாக தகவல் தொடர்பு, இலக்கவில் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயவு, இந்த நல்ல செய்தியில் காத்திருப்பதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
சம்பள உயர்வு தொடர்பான இந்த நல்ல செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அல்லது அரசாங்க தலைமைச் செயலாளர் தன் ஶ்ரீ சுக்கி அலி அறிவிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.








