பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில், ஓர் அலங்காரப் பொருளாக அம்னோ இருந்து விடக்கூடாது என்று முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், இனம் மற்றும் நாடு ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவதிலும் கண்டிப்பதிலும் அம்னோ அஞ்சக்கூடாது என்று முன்னாள் அம்னோ உதவித் தலைவருமானஇஸ்மாயில் சப்ரி வலியுறுத்தினார்.
மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும் போது அவைக் குறித்து நடப்பு அரசாங்கத்தில், அம்னோ இளைஞர் பிரிவு கேள்வி எழுப்புவதிலும், குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் என்ன தவறு என்று இஸ்மாயில் சப்ரி வினவினார்.
ஒரு காலத்தில், துணிச்சல் மிகுந்த பிரிவாக காணப்பட்ட அம்னோ இளைஞர் பிரிவு, அத்தகைய ஆற்றல் வாய்ந்த கலாச்சாரத்தை இழந்து வருவது வருத்தமளிக்கிறது என்று பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்ட்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


