பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
சூதாட்ட நிறுவனங்களிடமிருந்த எதிர்க்கட்சியினர் அரசியல் நிதியை பெற்று வருகின்றனர் என்று பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரான அன்வார் கூறியதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டுகிறார்.
பிரதமர் அன்வாரின் குற்றச்சாட்டில் அடிப்படை உண்மையில்லை, முற்றிலும் அவதூறாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
அன்வாரின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தற்போது தமது வழக்கறிஞருடன் கலந்து ஆலோசித்து வருவதாக முகைதீன் தெரிவித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


