கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரப்பட்ட 300 க்கும் மேற்பட்ட நேபாள பிரஜைகள், வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் போல வேலை தரப்படாமல் , வருமானமின்றி கடந்த மூன்று மாத காலமாக நெகிரி செம்பிலான், நீலாயில் அவதியுற்று வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டம் கட்டமாக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட அந்த நேபாள பிரஜைகள் Star Doman Resources Sdn. Berhad என்ற நிறுவனத்தில் துப்புரவுப்பணிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாக மலேசியாவிற்கான நேபாள தூதரக தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு தொழிலாளரும் பெரும் பணம் செலுத்தப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி


