மலாய் பிரகடன நடவடிக்கையை தொடங்கியுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு அரசியல் தலைவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மலாய்க்காரர் பிரகடனம் குறித்த விசாரணைக்காக பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் பினாங்கு மாநில துணைத் முதல்வர் டாக்டர் பி. ராமசாமி ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அதன் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரே நோக்கத்துடன் துன் டாக்டர் மகாதீரால் மலாய் பிரகடனம் தொடங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய டாக்டர் ராமசாமி, விரைவில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


