May 20, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரிப்பு

Share:

இவ்வாண்டு முதல் நான்கு மாதக் காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில், பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரையில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட 155 பாலியல் குற்றச்செயல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதில் 33 மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.

Related News