ஜோகூர் மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள 5, 746 குடும்பங்களில் 3,099 குடும்பங்கள் அதாவது 54 விழுக்காட்டினர் அடுத்த நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளனர். 6 மாதங்களில் இந்த மேம்பாட்டை அம்மாநில அரசு மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளதாக அதன் முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.
"விரும்பிய குறிக்கோளை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் வித்தியாசமான அணுகுமுறையின் வெற்றிக்கு இது இன்னொரு சான்று.
மாநில அரசு அடைந்த வெற்றியைத் தொடர்ந்து மத்திய அரசும் இதே போன்ற வழிமுறையைப் படுத்தி மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களை நிறைவேற்றி வெற்றி பெறும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.
மாநிலத்தில் உள்ள வறிய நிலையில் உள்ள குடும்பங்களை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்தெடுத்து அவர்களை அடுத்தக் கட்டம் நோக்கி மேம்படுத்த வேண்டும் என ஒன் ஹஃபிஸ் கேட்டுக் கொண்டார்.







