May 21, 2026
Thisaigal NewsYouTube
நான்கு ஆடவர்கள் மீது பாலியல் பலாத்கார குற்றச்சசாட்டு
தற்போதைய செய்திகள்

நான்கு ஆடவர்கள் மீது பாலியல் பலாத்கார குற்றச்சசாட்டு

Share:

பேரா, கிரீக்கில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று சகோதர்கள் உட்பட நான்கு ஆடவர்கள் மீது கோல கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

23,17,16,14 வயதுடைய அந்த நான்கு ஆடவர்கள் நீதிபதி ரொஹைடா இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இந்த நால்வரும் கடந்த நவம்பர் மாதம் முற்பகுதியில் கெரிக், கம்போங் பாஹாட் லுவார் என்ற இடத்தில் ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News