May 21, 2026
Thisaigal NewsYouTube
வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்
தற்போதைய செய்திகள்

வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

Share:

மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கி, தவித்த 121 மலேசியர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

121 மலேசியர்களும் சீனா,குன்மிங் மார்க்கமாக விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ முஹமாட் அலாமின் தெரிவித்தார்.

அந்த 121 பேரும், மியன்மார் - ​சீனா எல்லைப்பகுதியான லவுக்காயிங் - கில் ஒரு மோசடிகும்பலிடம் ​வேலை செய்து வந்துள்ளனர். அந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ​நெருக்கடியைத் தொடர்ந்து யங்கோனில் உள்ள மலேசியத் ​தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மியன்மார் - ​சீனா எல்லை வழியாக அவர்கள் வெளியேற்றப்பட்டு, ஏர் ஆசியா விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக துணை அமைச்சர் முஹமாட் அலாமின் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 16 ​ஆம் தேதி ​சீனா தலைநகர் பெய்ஜிங்கிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட துணை​ப்பிரதமர் ஃபடிலா யூசோஃப், ​சீனாவின் துணைப்பிரதமர் லியு குவா சோங் - கை சந்தித்து இவ்விவகாரம் குறித்து பேசியதன் விளைவாக அந்த 121 மலேசியர்களும், மியன்மாரிலிருந்து ​சீனாவின் எல்லை வாயிலாக ​மீட்பதற்கு துணைப் புரிந்தது என்று முஹமாட் அலாமின் மேலும் விவரித்தார்.

Related News