May 20, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன ஹடி ஆவாங்கிற்கு எதிராக
தற்போதைய செய்திகள்

போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன ஹடி ஆவாங்கிற்கு எதிராக

Share:

இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், பகிரங்கமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் இனத்துவேச தன்மையில் பேசி வரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன. ஆகக் கடைசியாக, பினாங்கு புக்கிட் பெண்டேரா எம்.பி. சியர்லீனா அப்துல் ரஷீத், ஹடி ஆவாங்கிற்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.

அந்த மதவாதியின் ஒவ்வொரு அறிக்கையும், குற்றவியல் அவதூறாகும் என்பதுடன், நிந்திக்கும் தன்மை கொண்டதாகும். பிற இனத்தவர்களுக்கு எதிராக மலாய்க்காரர்களைத் தூண்டி விடும் ஹடி ஆவாங்கின் செயல் மிக ஆபத்தானதாகும் என்று அந்த எம்.பி. தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து அதன் வாயிலாக குளிர் காய்வதற்குத் துடிக்கும் ஹடி ஆவாங்கிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சியர்லீனா வலியுறுத்தியுள்ளார்.

Related News