இந்தியா மற்றும் சீன நாட்டு சுற்றுப்பயணிகளுக்கு வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து மலேசியா வழங்கவிருக்கும் 30 நாள் விசா விலக்களிப்பு சலுகை, ஓராண்டுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் 30 நாள் விசா விலக்களிப்பு சலுவை வழங்கப்படுவது மூலம் மலேசியாவிற்கு வரக்கூடிய முதலீடுகள் மதிப்பீடு செய்யப்படும்.
தவிர, பாதுகாப்பு அம்ச ரீதியாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் இந்த ஓராண்டு காலத்தில் மதிப்பீடு செய்யப்படும் என்று அமைச்சர் சைபுடின் நசுஷன் தெரிவித்தார்.
இந்த 30 நாள் விசா விலக்களிப்பு சலுகையினால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழுமானால் அச்சலுகை குறித்த மலேசியா மறு ஆய்வுச் செய்யும் அதேவேளையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அச்சலுகையை பலப்படுத்துவதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.








