May 21, 2026
Thisaigal NewsYouTube
சிமெண்ட் மொழுகி கழிப்பறையில் கிடந்த சடலத்தின் அடையாளம் அறியப்படவில்லை.
தற்போதைய செய்திகள்

சிமெண்ட் மொழுகி கழிப்பறையில் கிடந்த சடலத்தின் அடையாளம் அறியப்படவில்லை.

Share:

கில்ளான், கம்போங் பென்டாமாரரில் ஒரு வீட்டின் கழிப்பறையில் சிமெண்ட் மொழுகப்பட்ட பெண்ணின் அடையாளம் இன்னும் அறியப்பட வில்லை எனத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் துறை எசிச்தன் கமிஷ்னெர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

இந்தக் கொலை தொடர்பில் ஷா ஆலாம் மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது, 23 முதல் 30 வயதுக்குல்ளான அந்தப் பெண்மணியின் கழுத்தில் ஏற்பட்ட நெருக்குதல் காரணமாக உயிரிழந்ததாக அவர் சொன்னார்.

அப்பெண் இறந்த நேரம் குறித்து மருத்துவர்களால் இன்னும் அறியப்பட வில்லை,

இந்தக் கொலை வழக்கு தொடர்பில் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 53 வயது மிக்க வெளிநாட்டுவாசி ஒருவரைக் காவல் துறை கைது செய்துள்ளது. அதே நேரம் இரஞ்சித் சிங், மண்டீப் சிங் ஆகிய இருவரை காவல் துறை தற்போது வலை வீசி தேடி வருகிறது.

Related News