வட மாநிலங்களில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கேங் மிஸான் கொள்ளைக் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
வீடு புகுந்து கொள்ளையிடும் இக்கும்பல் கடந்த மே 20 ஆ ம் தேதி பீடோங், சுங்கைப்பட்டாணியில் ஒரு வர்த்தகத் தளத்தில் நுழைந்து 25 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையடித்தது தொடர்பில் பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து கேங் மிஸான் கும்பலுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்ததாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹசான் தெரிவித்தார்.
இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 25 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்களும் , ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ வான் ஹசான் குறிப்பிட்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


