May 21, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மாற்றான் தந்தை கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மாற்றான் தந்தை கைது

Share:

ஜொகூர், இஸ்கன்டார் புத்தெரி, புக்கிட் ஹொரிசோன்- யில் வெளிநாட்டைச் சேர்ந்த தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 54 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபிலிபின் - னை சேர்ந்த 18 வயதுடைய பெண்ணை மாற்றான் தந்தை 12 வயதிலிருந்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் புரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்ததாக இஸ்கன்டார் புத்தெரி ஓசிபிடி ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.

பாதிக்கப்பாட்ட அப்பெண் நவம்பர் 24 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டதாக நேற்று ஓசிபிடி ரஹ்மாட் அரிஃபின் விளக்கினார்.

பின், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலங்களில் சில முரண்பாடுகள் இருந்ததால் அந்நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related News