சிலாங்கூர் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மனித வள அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ ஏற்பாட்டில், கிள்ளானில் இன்று தொடங்கியிருக்கு வேலை வாய்ப்புச் சந்தை, வருகையாளர்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்க வல்லதாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதி ராவ் தெரிவித்தார்.
கிள்ளான் டேவான் ஹம்ஸா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில், ஆஸ்த்ரோ, வேஸ்த்போர்ட், மேய்பேங்க் போன்ற 38 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக கணபதி ராவ் குறிப்பிட்டார்.
தங்கள் நிறுவனத்தில் எத்தகைய வேலை வாய்ப்புகள் உள்ளன, எத்தகைய மனுதாரர்கள் தேவைப்படுகின்றன என்பதற்கு முகப்பிடங்களை அமைத்து வேலை வாய்ப்புகளை வழங்க அவை முன்வந்திருப்பதாக கணபதி ராவ் விவரித்தார்.
தாயாரிப்புத் துறை, சேவைத் துறை, வங்கித் துறை , உணவுத் துறை மற்றும் உபசரனைத் துறை ஆகியவற்றில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றிக்கொள்வதற்கு இளையோர்கள் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கணபதி ராவ் கேட்டுக்கொண்டார். இந்த வேலை வாய்ப்புச் சந்தையை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


