May 20, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கெடா மாநிலம் கெப்பாலா பத்தாஸ், ஜாலான் தித்தி காஜா பகுதியில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு, காரில் இருந்த பெண், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஆறு அங்குல நீளமுடைய “ராம்போ” கத்தி ஒன்று சந்தேகநபரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள வயல் வெளியில் அந்தக் கத்தியானது மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான தனித்து வாழும் தாயான அப்பெண், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 32 வயது ஆடவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்