சட்டமன்ற தேர்தல் வாயிலாக நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுவது ஒரு மிரட்டல் அல்ல என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைப்புடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப் படுத்துவதிலும், மக்களின் நலன் சார்ந்த அம்சங்களிலும், தீவிர கவனம் செலுத்தி வருவதால், இது போன்ற மிரட்டல், ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று உள்துறை அமைச்சருமான சைப்புடின் நசுதியோன் விளக்கினார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மத்திய அரசாங்கத்தை வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 6 மாநிலங்களின் அரசுகளை எதிர்கட்சிகள் கைப்பற்றுவது மூலம், மத்திய அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று எதிர்கட்சிகள் மனப்பால் குடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்


