பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்த விருக்கும், ஹரி ராயா மடானி மலேசியா திறந்த இல்ல பொது உபசரிப்பு, நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் நடைபெற விருக்கிறது.
இந்தப் பொது உபசரிப்பில் மேன்மை தங்கிய கெடா சுல்தான், சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷா கலந்துகொள்ளவிருக்கிறார்.
அரச சடங்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில், பொது மக்களுடனான இந்தப் பொது உபசரிப்பில் கலந்துகொள்வதற்கு கெடா சுல்தான் இணக்கம் தெரிவித்திருப்பது குறித்து, தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தமது நன்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த விருந்து உபசரிப்பு அலோர் ஸ்டார், ஹோட்டல் ரையா வில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவிருக்கிறது.

Related News

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்


