தமக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டைக் கட்டவிழ்த்திருப்பதாக கூறி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் 15 கோடி வெள்ளி இழப்பீடு கோரி அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.
தம்மிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தாம் விடுத்திருந்த கோரிக்கையைப் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் பொருட்படுத்தாததைத் தொடர்ந்து, துன் மகாதீர் இந்த அவதூறு வழக்கைச் சார்வுச் செய்துள்ளார்.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி, ஷா ஆலம், ஸ்டேடியம் மெலாவாத்தி ஸ்டேடியமில், உரையாற்றிய போது, தமது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அன்வார் அவதூறான குற்றச்சாடை முன்வைத்திருப்பதாக துன் மகாதீர் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளர்.
குறிப்பாக, நாட்டின் பிரதமராக சுமார் 22 ஆண்டுக் காலம் பொறுப்பேற்றிருந்த போது, தமக்கும், தமது குடும்பத்திற்கும் கோடிக்கணக்கான வெள்ளி சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக அன்வார் குற்றஞ்சாட்டியிருப்பதாக துன் மகாதீர் தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


