நீதித்துறையின் சுதந்திரம் உட்பட அச்சட்டத்தை நிலைநிறுத்துவது மீதான தீர்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் அவசர ஆண்டுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
இப்படியொரு அவசரக்கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று 173 உறுப்பினர்கள் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த அவசரக்கூட்டம் நடத்தப்படுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரும் மே 10 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மசீச கட்டடத்தில் உள்ள சான் சூன் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு 500 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் நடைபெறும் அன்று கோரம் இல்லா விட்டால் அக்கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்


