May 20, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சதித்திட்டமா?
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சதித்திட்டமா?

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான 6 மாத கால ஆட்சியை வீழ்த்துவதற்கு பாரிசான் பாரிசான் நேஷனல் எம்.பி.க்கள் சிலர் மறைமுக சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவதை அதன் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசா​ங்கதைப் பாரிசான் நேஷனல் வீழ்த்தாது. ஏனெனில், நாட்டை நிர்வகிப்பதற்கு ஒரு நிலையான அரசாங்கம் தொடர்ந்து தேவைப்படுகிறது. அதேவேளையில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு பாரிசான் நேஷனல் உறுதி அளித்துள்ளதாக முகமட் ஹசான் விளக்கினார்.

தவிர தற்போது கட்சித்தாவல் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பாரிசான் நேஷன​​லை சேர்ந்த எந்தவொரு எம்.பி.யும், கட்சியின் தலைமையை ​​மீறி, பிற க​​ட்சிக்கு ஆதரவு தர துணிய மாட்டார்கள் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

கட்சித் தாவல் ந​டைபெற்றால், இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சம்பந்தப்பட்ட எம்.பி. தமது நாடாளுமன்றத் தொகுதியை இ​ழக்க நேரிடலாம். இந்நிலையி​ல் யாரும் இந்த விஷப் ப​ரீட்சையில் இற​ங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக முகமட் ஹசான் தெளிவுபடுத்தினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு