தெலுக் இந்தான், ஜெட்டி கம்போங் திரெங்கானு அருகே காணாமல் போய்விட்டதாக கூறப்படும் 14 வயது மாணவர், அங்குள்ள சுங்கை பேராக் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேற்றிரவு 7 மணியளவில், வி.ஜோன்சன் என்ற அந்த மாணவரின் புத்தகப் பை மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை அந்த ஜெட்டியின் அருகே பொதுமக்களால் கண்டுப்பிடிக்கப்பட்டதாக ஹீலேர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர், எசிபி அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார். அம்மாணவரை தேடும் பணியை மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல் துறையினரும் முழு வீச்சில் முடுக்கியுள்ளதாக அமாட் அட்னான் குறிப்பிட்டார்.

Related News

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது


