May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வழக்கம்போல் பள்ளிகள் தொடங்கின
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் வழக்கம்போல் பள்ளிகள் தொடங்கின

Share:

ஜோகூர் மாநிலத்தில் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அம்மாநிலத்தில் உள்ள ஆயிரத்து 193 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல் தொடங்கின.

ஜோகூர் மாநில கல்வி, தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜொஹோர் லாமா சட்டமன்ற உறுப்பினருமான நொர்லிசா நோ இது குறித்து தெரிவிக்கயில், வெள்ளம் எற்பட்டதால் பள்ளி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக எந்தப் பள்ளியில் இருந்தும் புகார் கிடைக்கப்பெற வில்லை எனக் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செகாமாட் வட்டாரத்தில் உள்ள பொது மண்டபங்கள் துயர் துடைப்பு மையங்களாக மார்றப்பட்டுள்ளதால், 908 ஆரம்பப் பள்ளிகளும் 285 இடைநிலைப் பள்ளிகள் முழுமையாக கற்றல் கற்பித்தலை இன்று தொடங்கி இருக்கின்றதாக அவர் தெரிவித்தார்.

தற்பொழுது, நிலையில்லாத வானிலை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டு பள்ளிக்கு வர இயலாத மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாகப் பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என நொர்லிசா நோ கேட்டுக் கொண்டார்.

Related News