தென்கிழக்காசியாவிலேயே மிக பழமையான தேவாலயமான மலாக்கா, பண்டார் ஹிலிரில் குன்றின் மீது அமைந்துள்ள செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று மலாக்கா அருங்காட்சி வாரியம் அறிவித்துள்ளது.
அந்த வரலாற்றுக்கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகமான அமலாக்க அதிகாரிகள் மலாக்கா மாநகர் மன்றம் மூலமாக கடமையில் அமர்த்தப்படுவர் என்று அந்த அருங்காட்சி வாரியத்தின் தலைவர் டத்தோ அக்ராமுடின் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
இன்று செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த 1511 ஆம் ஆண்டு மலாக்காவை கைப்பற்றிய போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட செயிண்ட் பால்ஸ் தேவாலய கட்டடத்தின் சில பகுதிகள் பொறுப்பற்ற நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த தேவாலயத்தில் உடைந்த சிதிலங்களை அக்ராமுடின் அப்துல் அஸீஸ் பார்வையிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


