கோடை வெப்ப பக்கவாத தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். ஷாரோல் ஐரில் முகமட் ஹெகாக் என்ற அந்த 12 வயது சிறுவன், ஜோகூர், குளுவாங், என்சே, பெசார் ஹஜ்ஜா கல்சொம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அச்சிறுவனின் தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது இரு மகன்களும் , மனைவியும் காய்சலினால் மருந்து உட்கொண்டிருந்த நிலையில் அவர்களை குளிர்சாதன வசதி கொண்ட வரவேற்பு அறையில் உறங்கச் சொன்னதாக தந்தை ஷரோல் அஸ்மி குறிப்பிட்டார். அப்போது பலத்த அலறல் சத்தம் கேட்டு வரவேற்பு அறைக்கு ஓடி சென்று பார்த்த போது தமது இளைய மகன் ஷாரோல் ஐரில் நடுங்கிக்கொண்டு இருந்ததைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதாக தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


