May 20, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டமா?
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டமா?

Share:

பிரதமர் அன்வார் கடும் எச்சரிக்கை

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முயற்சிப்பவர்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கீழறுப்பு நடவடிக்கை வேண்டாம். சகித்துக்கொள்ள மாட்டேன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

ஆட்சி அமைப்பதற்குத் தங்களிடம் போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, வதந்திகளைப் பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் அன்வார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தமக்கு உண்மையிலேயே ஆதரவு இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று பிரதமர் மீண்டும் நினைவுறுத்தினார். சீரான அரசியல் பயணத்தில் கேடு விளைவிக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாரிசான் நேஷனலைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் பதவி விலகி, இடைத்தேர்தலின் வாயிலாக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றியை ஏற்படுத்தி, புதிய ஆட்சிக்கு வழிவிடுவதற்கு சதி முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவது தொடர்பில் அன்வார் கருத்துரைத்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு