May 21, 2026
Thisaigal NewsYouTube
புத்தாண்டு கொண்டாட்டத்தில் 6,000 சமான்கள், 84 நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் 6,000 சமான்கள், 84 நபர்கள் கைது

Share:

புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து டிசம்பர் 31 முதல் 1 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சோதனையில் 84 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6,297 சமான்கள் சட்டவிரோதமாக சாலையில் செயல்பட்டவர்களுக் கு வழங்கப்பட்டன.

பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் ஆமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க துறையின் தலைவர் டத்தோ முஹமாட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாததால் 1,422 சமான்களும் வாகனங்களின் பதிவு எண் விவரக்குறிப்புகள் இல்லாத குற்றத்திற்காக 1,788 சமான்கள் வழங்கப்பட்டதாக முஹமாட் அஸ்மான் கூறினார்.

அதிகாலை 5 மணியளவில் முடிவுற்ற இச்சோதனையில் 366 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முஹமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.

இந்த திடீர் சோதனையில் பல்வேறு அமலாக்க அமைப்புகளை சேர்ந்த 4,378 அதிகாரிகள் மற்றும் ஈடுபட்டதாக அவர் அறிவித்தார்.

Related News