தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் தொழிலாளர்கள் சார்பாக முதலாளிமார்கள் தரப்பில் செலுத்தக்கூடிய சந்தா விகிதம், உயர்த்தப்படுமானால் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் வேலையிலிருந்து நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புள்ளிவிவர இலாகாவின் தகவல்படி கடந்த பிப்ரவரி மாதம் வரை நாட்டில் வேலையில்லாதவர்கள் விகிதம் 3.5 விழுக்காடு அல்லது 5 லட்சத்து 91 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்கள் சார்பாக முதலாளிமார்கள் தங்களின் பங்களிப்பாக செலுத்தக்கூடிய இபிஎப். சந்தா விகிதம் 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுமானால், வேலை நீக்கம் செய்யப்படக்கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் சாத்தியம் உள்ளது. இது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை விகிதத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என்று மலாய் வர்த்தக சபையின் இடைக்கால தலைவர் நூர்ஷரின் ஹமிடொன் அச்சம் தெரிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


