கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சரக்கு கிடங்கில் எட்டு பெட்டிகளில் 15 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள மின்னியல் மென்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு நபர்களும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதிக்கும் 29 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுங்கை பேலேக், கே.எல்.ஐ.ஏ, நீலாய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் அந்த அறுவரும் பிடிபட்டனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிப் பெட்டி, கைப்பேசி போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய அந்த மின்னியல் மென்பொருட்கள் தைவானுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


