பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சனிக்கிழமை கெடா, அலோர் ஸ்டாரில் நடத்திய ஹரிராய திறந்த இல்ல பொது உபசரிப்பில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவ்வாண்டு ஹரிராயாவையொட்டி பிரதமர் 6 இடங்களில் நடத்தவிருக்கும் பொது உபசரிப்பின் முதலாவது நிகழ்வு இன்று அலோர் ஸ்டார், ஹோட்டல் ராஹியாவில் நடைபெற்று வருகிறது. ஹோட்டலின் வெளி வளாகத்தில் 5 பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டபமான முறையில் பிரதமரின் பொது உபசரிப்பு நடைபெற்று வருகிறது.
பல வகையான உணவுப்பொருட்கள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில் அனைவரையும் நலம் விசாரித்தவாறு பிரதமர் தமது ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காலை 10.37 மணிக்கு இந்தப் பொது உபசரிப்பில் தனி நபராக கலந்து கொண்ட கெடா மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், மத்திய அரசாங்க அமைச்சர்களுடன் கைகொடுத்து விட்டு, பின்னர் மேன்மை தங்கிய கெடா சுல்தான் மற்றும் பிரதமர் அன்வாருடன் ஒரே மேஜையில் அமர்ந்திருந்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


