முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், சிறைச் சாலையில் தொடர்ந்து தண்டனை அனுபவித்து வருவதைக் காட்டிலும், அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சிறந்த வழிமுறையாகும் என்று சிலாங்கூர் பாஸ் கட்சி தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
நஜீப்பின் SRC International லஞ்ச ஊழல் வழக்கிற்குத் தலைமை ஏற்ற நீதிபதி நஸ்லான் கஸாலிபற்றிய சில தகவல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து, நஜீப்பிற்குப் பொது மன்னிப்பு வழங்குவது ஏற்புடையதே என்று பாஸ் கட்சியின் சுபாங் தொகுதித் தலைவர் சகாருடீன் முகமட் குறிப்பிட்டார்.
நஜீப் சம்பந்தப்பட்ட வழக்கில், நீதிபதி நஸ்லான் தொடர்புடைய நல சார்ந்த அம்சங்கள் இருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து, நஜீப்பிற்கு எதிரான விசாரணை இஸ்லாத்தின் வழிகாட்டல் முறைக்கு ஏற்ப நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சகாருடீன் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


