நெகிரி செம்பிலான், கோலாக் கிளாவாங், முக சவுக் என்ற இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது மான் என நினைத்து, தமது நண்பரை சுட்டுக்கொன்ற ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் 52 வயதுடைய அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவல், வரும் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜெலெபு மாவாட்ட போலீஸ் தலைவர், துணை சுபரித்தென்டன்மஸ்லான் உடின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், முக சவுக்கில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்ற போது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படும் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி, 61 வயதுடைய ஆடவரை அந்நபர் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மஸ்லான் உடின் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


