May 21, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார்.
தற்போதைய செய்திகள்

வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார்.

Share:

ஜோகூர்பாரு,ஜன.4
உணவகம் ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்த வங்காளதேசப் பிரஜை ஒருவர், மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழ்களை தன் வசம் வைத்திருந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோகூர்பாருவில் உள்ள வர்த்தகத் தளங்களில் நேற்று இரவு மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தாமான் அபாட்என்ற இடத்தில் உள்ள ஓர் உணவகத்தில் சம்பந்தப்பட்ட வங்காளதேசி, மற்றவர்களுக்கு சொந்தமான கடப்பிதழை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

வங்காளதேசம் மற்றும் இந்தியப் பிரஜைகளின் கடப்பிதழ்களை அந்த நபர் அலமாரி ஒன்றில் பூட்டி வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரியவந்தது என்ற ஜோகூர் மாநில குடிநுழைவு இலாகா இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

Related News

வங்காளதேச கேஷியர் ஒருவர் பிடிபட்டார். | Thisaigal News