May 20, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் விசாக தின கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் விசாக தின கொண்டாட்டம்

Share:

"துன்பத்திற்கு மூலக்காரணம் ஆசைதான்” எனும் மாபெரும் தத்துவத்தை உலகிற்குப் போதித்த சித்தார்த்த கெளதம புத்தரின் பிறந்த தினமான விசாக தினம், இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோலாலம்பூர், ஈப்போ, பினாங்கு உட்பட பல மாநிலங்களில் உள்ள புத்த விகாரங்களில் காலையில் சிறப்பு பூசைகள் மற்றும் வழிபாடுகளுடன் விசாக தினம் வரவேற்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்களும், புத்த பிக்குகளும், சன்னியாசிகளும், பொது மக்களும் இத்தரணியில் தோன்றிய அந்த மகா ஞானியின் உன்னத விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெர்ஹாலாவில் உள்ள மஹா விகாரத்திலும், பழைய கிள்ளான் சாலையில் உள்ள புத்தர் ஆலயத்திலும், செந்தூல், ஶ்ரீ லங்கா புத்த விகாரத்திலும் விசாக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புத்தரின் சிலைக்கு முன் விளக்குகளை ஏந்தி, மலர்களைத் தூவி மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆங்காங்கு அமர்ந்திருந்த புத்த பிக்குகள் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் புனித நீர் தெளித்து, கைகளில் ஆசீர்வாதிக்கப்பட்ட கயிற்றை கட்டி, அருளாசி வழங்கினர். ஈப்போ தம்புனில் உள்ள புத்த விகாரத்திலும் விசாக தினம் களைக்கட்டியது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு