May 21, 2026
Thisaigal NewsYouTube
பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

Share:

பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை, கோலாலம்பூர் சிலாங்கூர் chinese assembly மண்டப்பத்தில், 200பேர் படைச்சூழ இனிதே தொடங்கியது. இந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கில் தமிழ்நாடு, இலங்கை, அமெரிக்கா, ஜெர்மன், கனடா நாட்டை சேர்ந்த பேச்சாளர்கள் கலந்துக் கொண்டு தங்களின் கருத்துகளை நன்முறையில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மலேசிய வரலாற்றில் முதன் முறையாக கருஞ்சட்டை இளைஞர்கள் ஒன்றிணைந்து கருத்தரங்கை வழி நடத்திருப்பது ஒரு வரலாற்றுக் என்பது மட்டுமின்றி, பல பெரியார் கொள்கை எதிர்ப்பு சார்ந்த இயக்கங்கள் கொடுத்த முட்டுகட்டுகளைத் தாண்டி கருஞ்சட்டை இளைஞர் படை ஏற்பாடு செய்திருந்த , கருத்தரங்கின் உள்ளடக்கத்தைக் கவனிப்பதற்காக போலீஸ்,குடிநுழைவு அதிகாரிகள், மற்றும் தேசிய ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்புத்துறை நிகராளிகளும் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காலை மணி 8.30 முதல் மாலை மணி 6.00 வரை கருஞ்சட்டை இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், சமூகம், ஆதிக்கம், ஒடுக்குமுறை, பெண்ணியம் தொடர்புடைய பெரியாரின் சிந்தனைகளும் பெரியாரின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டது என திரு நாகேந்திரன் சந்திரசேகரன் கூறினார்.

Related News