May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர்பாருவில் சோதனை, 137 பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர்பாருவில் சோதனை, 137 பெண்கள் கைது

Share:

Ops Noda எனப்படும் ஒழுங்கீன நடவடிக்கைக்கு எதிராக ஜோகூர்பாருவில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாடிக்கையாளர்களை உபசரிப்பவர்கள் என்று நம்பப்படும் 137 அந்நிய நாட்டுப் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர்பாருவில் உள்ள கேளிக்கை மையங்களில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையில் மேற்கொள்ளபட்ட இந்த சோதனையில் GRO போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

தவிர இப்பெண்களை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் உட்பட கேளிக்கை மையங்களின் நிர்வாகிகள் என மேலும் 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அரச மலேசிய போலீஸ் படை தெரிவித்துள்ளது.

Related News